பக்கங்கள்

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

வசவு

உன்
வசவும்
எனக்கு
இசைவு
தான்

நீ
பேசுவதே
அப்போது
தான்
என்பதால்




வியாழன், 20 செப்டம்பர், 2012

தமிழ்

ஆதி
இதன்
சாதி

அழிவில்லை
என்பது
நீதி

இளமை
இதன்
வயது

உண்மை
இதன்
 விளக்கம்

அழகு
இதன்
பொருள்

இனிமை
இதன்
நடை

அறிவு
இதன்
இயல்

தீராத
காதல்
எப்பொழுதும
இதன்
மீது
எங்களுக்கு

மாறாத
மோகம்
முப்பொழுதும்

ஆம்

முடிவில்லை
எங்கள்
தாகதிற்க்கு

.... பூங்குழலி


செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மணவாழ்க்கை


மீண்டும் மீண்டும்
துளிர்க்கும் காதல்

புத்தம் புதிய
பூக்களை போல

அனால்
எப்போதும்
ஒரு செடியுடன்

                       ... பூங்குழலி



காலம்



உன்னோடிருந்த
சில
நொடி
துளிகள்
கூட
என்னோடிருக்கும்
எப்போதும்


திங்கள், 17 செப்டம்பர், 2012

கல்லறைப்பூக்கள்


மாறிவிட்ட
மாற்றத்திற்காக

வாழும் போதே
இறந்தவர் கணக்கில்
இவர்கள்

உடலை மட்டும்
விட்டு விட்டு
உணர்வுகளை கொன்று
உயிரை வாட்டும்
மனிதநேயம்


மாறாத தாய்மையும்
பொய்த்து போனதே
இங்கு தான்

இயற்கையை நோவதா
இறையை நோக்குவதா

 இயற்கையின் மருமமிது
கண்டுவர நேரமேது

உயிரெல்லாம்
இருபால்
கலவை அன்றோ

ஆனால் இந்த
கருவறை பூக்கள்
மட்டும்
கல்லறை பூக்களாய்
ஆனதேன்

கலவையின்
விகிதமதில் வித்தியாசம்
இந்த கல்லறை
பூக்களின் இரகசியம்

                                                                  ....    பூங்குழலி













ஆரவாரம் 

எட்டி பிடிக்க
நினைக்கும்
இடம்
இமயம்மல்ல
சிகரம்

தொட்டு
விட
நினைப்பது
நிலவன்று
பகலவன்


கனவில்  மிதப்பது 

வானமன்று
வாண்வெளியில்



போட்டி என்று
யாரையும்
நினைக்க
ஆளில்லை


இது

அடக்க
முடியாத
ஆரவாரம்

விளக்க
முடியாத
வெளிச்சம்

நாளைய
சாத்தியம்
இன்றைய
நம்பிக்கை

... பூங்குழலி


பள்ளி செல்லும் பாப்பா 


கண்ணில் தெரிவது
என்ன
காட்சியா
பிழையா

உன்னை
மிரட்டும்
கேள்விகளை
வில்லாய்
வளைத்து
விடு

வானம்
கையில்
அகப்படும்
எட்டி
பிடித்து
விடு


நீ
காண்பதெல்லாம்
பிழையாமல்
காட்சியாக்க
சலியாமல்
உழைத்து
விடு

பள்ளி
நேராக
சென்று
விடு

கல்வியை
மறக்காமல்
கற்று
விடு

கற்றதை
கசடின்றி
பரப்பி
விடு


இந்த
வாழ்கையும்
வையம்மும்
உனக்கு
தான்
வாழ்ந்து
விடு

நீ
பிழையல்ல
காட்சி என
பின்னர்
புலப்படும்

......

கோமாளி

கோமாளி


சிந்தனை யாளனை
மந்தைகளாய் மாற்றி
சிரிக்க வைப்பவர்கள்

சீட்டுகட்டின்
நிழல் மன்னர்கள்
சர்க்கசின்
சாமானியர்கள்

கூத்து பட்டறையில்
கவலையை மறக்கடிக்கும்
வித்தை தெரிந்த
வைத்தியர்கள்

இவர்கள்
முட்டாள் அல்ல -- நாம்
கை கொட்டி சிரிக்க

எப்போது நம்மை (புத்திசாலிகளை )
முட்டாளாக்க வேண்டும் என்ற
வேதம் தெரிந்த அறிவாளிகள்

                                             .. பூங்குழலி





தமிழர்கள்


ஆதி எங்கள் சாதி
அந்தம் இல்லை
என்பது நீதி

இயற்கையோடு வந்தவர்கள்
மொழிக்கும்  இனத்திற்கு
இறையை  வென்றவர்கள் ,


இனத்தை தொலைத்து 
அடையாளத்தை இழக்க
முடியாதவர்கள் 

வீடு, பொருள், சொந்தம், தேசம் 
ஏன் சந்ததிகளை கூட  -- இனத்தை
தவிர ஒன்றுமில்லை
இன்று 


புவியே இல்லை - இனி
துச்சம்மில்லை
நெஞ்சங்களுக்கு


ஆணவம் பிடித்தவர்கள்
நாங்கள்


ஆம்
எங்கள் பெயர்
தமிழர்கள்

                                                            ... பூங்குழலி