நவீன ஏகலைவர்கள்
அர்ஜுனர்களுக்கு கிடைத்த
ஆசாரியர்களை விட
ஏகலைவர்களின்
துரோண(க)ர்களே
இங்கு அதிகம்
துரோணர் கூட
கேட்டது கட்டை விரலை
எங்கள் குருமார்கள்
உயிரை
நன்றிக்கு
காணிக்கையாக்க
காத்திருக்கும்
எங்களிடம் கேட்காமல்
எடுத்து கொள்ளுவது
தன்மானம் என்னும்
தட்சணையை
... பூங்குழலி