காலம் மாறியது
காட்சி மாறவில்லை
வீட்டை விட்டு
பெண்கள் வெளியில்
வந்தனர்
கொடுமைகள் வீதியை
தாண்டி தொடர்ந்தது
பட்டங்கள் பெற்று
சட்டங்கள் செய்தனர்
கொடுமைகள் சாட்சி
சொல்ல வந்தது
தேவதாசி ஒழிந்தது
கொடுமைகள்
திரைத்துறை வரை
வந்தது
பணிக்கு வந்தனர்
நல்ல
பதவியும் கிடைத்தது
கூடவே
பாலியல் தொந்தரவுக்கு
எதிரான விதிகளும்
வந்தது
திருமண ஆன
பெண்ணுடன்
கூடவே வந்தது
வரதட்சணை தடுப்பு
சட்டம்
வீட்டில் உள்ள
பெண்ணுக்கும்
குடும்ப வன்முறை
சட்டம்
குழந்தைக்கு கொடுமைக்கு