பக்கங்கள்

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

கந்தக பூமியின் கதையை கேளுங்கள்


உழைக்கும் மக்கள்
நாங்கள் என்பது
ஊரறிந்த செய்தி

உரிமை ஏதும்
இங்கு இல்லை
என்பது தான் நீதி

உழைப்பில்
உடலைமட்டும்
வளர்த்துவிட்டு
உயிரை விட்டு விட்டோம்


தேசத்தின் பாதுகாப்புக்கு
கந்தகத்தில் கைவைக்கிறோம்

தலைவர்களோ
கண்டு கொள்வதில்லை
எங்கள் துயரங்களை

உங்கள் மகிழ்ச்சிக்கு
மத்தாப்புடன் கதைபேசுகிறோம்

மக்களோ
கிஞ்சித்தும் நினைப்பதில்லை
எங்கள்

எங்கள் பிஞ்சுகளும்
இங்கு வெந்து சாம்பலாகுது
கந்தக அமிலத்தில்

வயது வளர
தோலும், சதையும்
மெல்ல உருகி குலையுது

அவசரமாய் அடுக்குகிறார்
அவலங்களை அரசின் மீது
சட்ட மன்ற உறுப்பினர்
இப்போது

இனி இவர்
எங்கள் துயரை
துடைப்பது எப்போது

பல உயிரை இழந்த பிறகு
பேசுகிறார்
செத்து போன வசனம்

வருமுன் காக்க
வரவில்லையே  இவர்
தருவாரா காரணம்

கண் கேட்ட பின்
ஏன்
கதிரவன்  தரிசனம் 

ஆம்
கேட்டு போனது
இவருக்கு  இல்லையே

உழைக்கும் மக்கள்
நாங்கள் என்பது
ஊரறிந்த செய்தி

உரிமை ஏதும்
இங்கு இல்லை
என்பது தான் நீதி

                                                                      .... பூங்குழலி