பேசி கொள்ள
அலைபேசி இருக்கு
பகிர்ந்துகொள்ள
பேஸ்புக் இருக்கு
பார்த்து உரையாட
ஸ்கைப்பும் உண்டு
ஆனால்
கணினி முன் உட்கார்ந்து
உன்னை தேட மனமில்லை
ஆம்
உன்னை உணரும் உணர்வு
எனக்கு அது தரவில்லை
உன் கை பிடித்து,
தோல் உரசும் ஸ்பரிசம்
எனக்கு வரவில்லை
அறியாத வயதில்
செய்த குறும்புகள்
நெஞ்சில் வந்தாலும்
அருகில் நீ
இல்லாமல் அது
இனிக்கவில்லை
ஒரு முறை
நேரில் வாயேன்
சில நாள்
என்னோடு
நாம் சுற்றி திரிந்த
கோவில், கடைதெரு
மொட்டை மாடி
பேசி முடியாத
ஊர் கதை
விகடன்,
ராஜேஷ் குமார், எஸ்ரா
முடிவில்
முடிவில்லாத
நம்ம ஊர்
அரசியல்
பார்த்து மகிழ்ந்த
தியேட்டர் சினிமா
கொலு, கண்காட்சி,
தோழர் படை
என நிறைய
கடற்கரையில்
கால் நினைத்து
கடந்து வந்த வயதை
உன்னோடு இருந்த
சில நிமிடங்களில்
தொலைத்து விட்டு
சின்னஞ்சிறு பிள்ளையாய்
மாறிவிடும் கோலமது
கடலை வாங்கி
மணலில் அமர்ந்து
சொந்த கதை பேசி
சோகத்தை குறைத்து
நிம்மதியை பெற்று
ஆட்டோவில் பேரம் பேசி
பின் பஸ் ஏறி
நேரத்துடன் போவதாக
நினைத்து,
தாமதமாகவே
வீடு சேர்வோம்
நல்ல வேலை வேண்டும்
வாழ்க்கை வேண்டும்
என்று வரம் கேட்ட நான்
பிரியாத நட்பு
வேண்டும் என்று
கேட்கவில்லையோ
.... பூங்குழலி